Sunday, November 15, 2009

நான்...

அவள் விரும்பும் திரைப்படம்.....

அவள் நகங்கள் நான் கடித்ததில்லை .....
அவள் பாதத்தில் என் இதழில்லை ...
அவள் தூசிகள் நான் ஊதியதில்லை ...
அவள் மச்சங்கள் நான் எண்ணியதில்லை ...
அவள் கூந்தல் நான் துவட்டியதில்லை .....
அவள் கோபம் நான் குழந்தையில்லை ...
அவள் வெட்கம் நான் தொடவில்லை ...
அவள் பேச்சு நான் முயற்சிக்கவில்லை ...
அவள் புகைப்படம் நான் சேகரிக்கவில்லை ...
அவள் பெண்மை நான் அடிமையில்லை ...
அவள் கவிதை நான் பேனா ... எழுதிக்கொண்டே ...
அவள் cindrella ...நான் cindrellaman...

தேடுகிறேன் ...
மேகத்தில் ... தூக்கத்தில் ... தொலைவில் ...
அவள் விரும்பும் திரைப்படம் ...

நீ...

உன் தொடக்கம் என் உலகம்
என் அழுகை உன் உயிர்ப்பு
உன் தீண்டல் என் நடனம்
என் குறும்பு உன் புன்னகை
உன் சுவாசம் என் முத்தம்
என் அனுபவம் உன் காதல்
உன் கோபம் என் பயணம்
என் வெற்றி உன் கண்ணீர்
நான் cindrellaman ...நீ...என் cindrella...

அவளைப்பற்றி சொல்கிறேன் ...

எங்களின் முதல் சந்திப்பு .....

எனக்கு கவிதை எழுத ...
சுடுகாடு பிடிக்கும் ...
அன்று ஒரு குழந்தையின் கல்லறையின் முன் அமர்ந்து ...
காமத்தில் முத்தம் வரியிட முயன்றேன் ....
வார்த்தைகள் தடை ...
எறும்புகள் வேறு கடிக்க ....அடுத்த கல்லறையின் முன் ...
அமர்ந்து எழுத என்னால் காமத்தை சுமக்க முடிந்தது ....
அந்த கல்லறை மனிதரின் வயது 1900 - 1989 என்று ...
பொறித்து அழிந்திருந்தது ...
அந்த மனிதர் சிறந்த தலைவியை அடைந்திருப்பார் என்று...மகிழ்ந்து சிரிக்க ... அடுத்து கல்லறைக்கு ஒரு கூட்டம் நுழைந்தது ...
அவர்களின் சோகம் என்சிரிப்பை மறைத்துக்கொண்டேன் ...
அந்த கூட்டத்தில் ...
ஒரு பெண்.... sorry இளம் பெண் ....மறுபடியும் sorry அழகான இளம் பெண் ...
அழுது வீங்கி அழுதுகொண்டிருந்தாள் ...
அனைவரும் அவளும் இறந்தவரை பார்க்க ...
நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன் ...
அனைவரும் கிளம்ப அவள் மட்டும் அங்கேயே இருந்தாள்...
அழுதுகொண்டிருந்தாள் ...அவளிடம் பேச முயற்சித்தேன் ...
முதலில் நான் மனிதன் தானா?...என்பதில் உறுதியாக இருந்தாள்...
5 நிமிடங்களுக்கு பிறகு ...
என் கவிதை அனுபவங்கள் அவளை இயல்பாக்கின ....
அவள் உதடுகள் ஈரமாக ...இருந்ததினால் மெல்லிய வடிவில் பேசினாள்...
இருவருமே பேசினோம் ....என்கவிதைகளை வாசிக்க கேட்டாள்....


எங்களின் காதல் ....

என்னை வாசிக்க ஆரம்பித்தாள்...
அவளை ரசிக்க ஆரம்பித்தேன் ...
இந்த கவிதையில் தவிர ...
இதை படிக்கும் உங்களை தவிர ...
அங்குள்ள கல்லறைகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ...
ஒரு கவிஞ்சன் சுடுகாட்டில் தன் தலைவியை சந்தித்தான் ...
அவளின் முதல் முத்தத்தை அங்குதான் ஏந்தினேன் ...
முதலில் அவள் சம்மதிக்கவில்லை ...
பேய்களின் முன் முத்தமா ?...
நாம் காதலர்கள் என்று தெரிந்தால் பேய்கள் நம் அருகில் வரா ...
நான் கொடுக்கட்டுமா ...நீ இடுகிறாயா ...
இப்போது பேய்களை விடுத்து ...
வெட்கத்தை எடுத்துக்கொண்டாள்...அதன் பின்னர் ...
அவளிடம் முத்தங்கள் ...கேட்பதே இல்லை ...ஏனென்றால்
அவளிடும் முத்தங்களின் ஈரம் காயும் முன்
அடுத்த முத்தங்கள் பிறந்துவிடுவதால் ....
வெட்கத்தை நான் எடுத்துக்கொண்டேன் ...


எங்களின் தாய்மை ...

முதல் முறையாக என்னை விடுத்து இன்னொரு உயிர்க்கு ...
அதே காதலுடன் முத்தமிட்டாள்...
அதே ஈரத்துடன் ...என்னையும் முத்தமிட்டாள் ...
என் தாய் இறக்கவில்லை என்றேன் ...
போடா ! என்றால் ....
நான் அழுதேன் ....தலை கோதினாள்...
உன் பிரசவ வலி தெரிந்திருந்தால் நான் இதற்க்கு மறுத்திருப்பேன் என்றேன் ...
அவள் என் தாயை உணர்ந்தேன் என்றாள்....
சிரித்தோம் ...
எங்கள் குழந்தை அழுதது ....
எங்கள் மூவர் உதடுகளிலும் ஈரம் இருந்தது ....


எங்களின் முதுமை ...

நாங்கள் இருவருமே குழந்தையானோம் ...
ஷேக்ஸ்பியரின் 7 வது stage இல்இருக்கிறோம் என்றேன் ....
அவள் அதை நம்பியதே இல்லை ....
என்னை முதன் முதலில் சந்தித்த
அந்த சுடுகாட்டில் அமர்ந்து என்னுடைய கவிதைகளை
இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதாக கூறுவாள் ...அதன் பின்
நான் கவிதைகள் எழுதுவதே இல்லை ...
அவளுடன் நானும் வாசிக்க தொடங்கினேன் ...
அவளை ....ஒரு பெண் sorry இளம் பெண் மறுபடியும் sorry அழகான இளம் பெண் ...
அழுது வீங்கி அழுதுகொண்டிருந்தாள் ...
அனைவரும் அவளும் இறந்தவரை பார்க்க ...
நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன் ...
அன்று ஒரு நாள் என் உடல்நலம் சரியில்லை ....
முத்தங்களையே மருந்தாக இட்டுகொண்டிருந்தாள்
மறுநாள் ....எனக்கும் தெரியவில்லை ...அவளும் நம்பவில்லை
நான் இறந்து விட்டதாக மற்றவர்கள் கூறுவது ...


நாங்கள் மட்டும் ...முழுவதும் தெரிந்ததினால் நீங்கள் மட்டும் ....



இதுவரை அவளைப்பற்றி அனைத்தையும் கூறிவிட்டேன் ....
அவள் வரும் நேரமாகிவிட்டது ...
அதே சுடுகாடு ...
என் கல்லறையில் அமர்ந்து இருக்கிறேன் ...
அவள் தூரத்தில் பூக்களோடு வருகிறாள் ...
அவள் கையில் என் கவிதைகள் ...
என் கல்லறையில் அமர்ந்து என் கவிதைகளை வாசிக்க தொடங்கினாள்...
அவளுடன் நானும் வாசிக்கதொடங்கினேன் ...
அவளை ....ஒரு பெண் sorry இளம் பெண் மறுபடியும் sorry அழகான இளம் பெண் ..

உன்னை நோக்கி முத்தங்கள் வீசப்படும்

பிடிக்கவில்லையா ...என்னை மட்டுமா ...அனைவரையுமா...
என் கண்களை அழ வைக்கிறாய் ...
ஏன் மௌனம் ...நீயும் அழுகிறாயா ...
என் முத்தங்கள் வீசுகிறேன் ..கண்ணீரை அடை...
முடியாதா...இரு இதை படிப்பவர்களையும் அழைக்கிறேன் ...
இப்போது சொல் ...
நீ சொல்வதை நான் அவர்களுக்கு சொல்கிறேன் ...அனைவரும் கேட்கட்டும் ....

படிப்பவர்கள் கேட்கிறீர்களா ?....

உன்னில் பாட்டியும் ..முயலும் நாங்கள் தான் வைத்தோம் ...
ஒ ' நீதான் அவர்களை பார்த்துக்கொள்கிறாயா....
மலை மேல ஏறி வா ....மல்லிகைப்பூ கொண்டு வா ... ம் ' அது குழந்தைகளுக்காக ...
ஒ ' நீ அதற்காக தினமும் முயற்சி செய்தாயா ...
அமுதே ...கண்ணே ...அது காதலர்க்காக ....குழந்தைக்கு உணவூட்ட ...
எங்களை இருள் மூழ்காமல் இருக்க நீ தேய்ந்தாயா ....

ஏய் ! ...அழுவாதே ...
இதைப்படிப்பவர்கள் கேட்கிறார்கள் ...
அவர்களிடம் நீ கேட்பதுபோல ஒரு வினா கேக்கட்டுமா ?
...ம் ' சரி ..
இதை படிப்பவர்கள் கடைசியாக எப்போது என்னை பார்த்தீர்கள் ?

நீ சொல்வது உண்மைதான் ...ஒரு சிலர்தான் பதில் சொல்கிறார்கள் ...
கடவுள் என்று சொல்லப்படுபவர் கூட தவம் , பூசை ,
திருவிழா பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் ...
ஆனால்
நீ ! நேரில் வருகிறாய் ...எங்களுக்காக தேய்கிறாய் ....
உன்னை பலவாறு பயன்படுத்துகிறோம் ...
காலச்சூழ்நிலை மாற மாற ...நீ புத்தகத்தில் மட்டும் ...மனதில் இல்லை ....
உன்னை பார்ப்பவர்கள் மறைந்து போகவில்லை ...
அதே வேளை மக்கட்தொகையும் ...ம் ' ஹும்
உன் கோபம் நியாயமானது ....ஆதரவளிக்கிறேன் ....
இதே படிப்பவர்களும் அளிப்பார்கள் ...
நீ நண்பன் ...காதலி ...தாய் ....தெய்வம் ...குழந்தை ...கோள்....
உன்னை நோக்கி முத்தங்கள் வீசப்படும் ....கோபம் கொள்ளாதே ...

நீங்கள் கேட்டவை ...

வரும்வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனைய ...
முகிலெடுத்து முகம்துடைத்து விடியும்வரை நடைபழகு ...
வானவீ .... வேறு பாடலா?...சரி ...
கம்பன் ஏமாந்தான் அவன் இளம் கன்னியரை ஒரு ...
கூடாதா ... சோகமா ?...
வைரமுத்து ...வாலி ...
உயிரோட்டம் வேண்டுமா ?...
கண்ணதாசன் ?...
வார்த்தையில் கவிதை வர வேண்டுமா ?
நீர்விடுகிறாயா ...நிழல்வளர்க்கிறேன்...
குழம்பாதே ...தொடர்பிட்டுக்கொள்...
நீ......நீர்.....காற்று.....மேகம்......ம
ழை........விவசாயி......நான்
..........ம் "

தந்தனத்தத்தன தைய்யனத்தத்தன தானன்னதத்தன தானத்தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

லல்லலள்ளலள்ள லாலலள்ளலள்ள லலளலாள லாலலள்ளல லாலாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தன்னானா ....சந்தங்கள்
னனன்னா ...நீயானால்
ரிசரி .... சங்கீதம்
லாலாலா ... நானாவேன்

வார்த்தையில் கவிதையில்லை
ரசனையின் வீணை மீட்டு
கண்டுபிடி கண்டுபிடி கண்டுபிடி ...
குழம்பாதே ...தொடர்பிட்டுக்கொள்...
கற்பனை ...ஓவியம் ...சருகு...இலையுதிர்க்காலம் ...
மூங்கில் ...விஸ்வநாதன் ...இளையராஜா...
கண்டுபிடித்துவிட்டேன் ....
எங்கே பார்க்கலாம் ?
மயக்கம் தந்தது யார்? ...தமிழோ?...அமுதோ? ...கவியோ?...
சிறப்பு ...நீ மெய்யான ரசிகன் ...
ம் "?
இன்று போதும் உணவிட்டுக்கொள்...
கவிதை தீர்ந்துவிட்டதா ?
நிலவு நிறைய கவிதைகள் உண்டு ...
விஸ்வநாதன் ... இளையராஜா ?
என் ஏவலுக்கு கட்டுப்பட்டால் ...
புன்னகை செய் ...
ம் '...
இசை செவிலிகள் கவனிக்கலாம் ...
கவிதையில் களைத்துவிட்டான்...

யாரது? ...என் அப்படி பார்க்கிறீர்கள் ?
அரை நாளிகை...ஒன்று கேக்கலாமா ?...
நீங்கள் ....?
இதுவரை கவனித்தவன் ...
அப்படியென்றால் நிச்சயமாக ...
பாடியவர் ...?
விஸ்வநாதன்... இளையராஜா.... பைத்தியக்காரன்...
புரியவில்லை ...?

கால் நொடி கவனியுங்கள் ...உணர்கிறீர்களா?

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே ...
மேலாடை மூடியே ஊர்கோளமாய் போவதேன் ...

பாட ஆரம்பித்துவிட்டான் பைத்தியக்காரன்..

அவர்கள் சூரியனென்றால் ...இவன் பூமி
இவன் காதல் சுற்றுதான் ...

நீங்கள் கேட்டவை...

என் சினிமாவும்,அவள் சுக்கு காப்பியும்...சுவை

கிமு . 1330 ஆம் வருடம் ரஷ்யா

இரவெல்லாம் மக்கள் வெளிவரா பனி
அதிகாலை ஒதுங்கிய ...டைட்டானிக் கப்பல்
சிரிப்புடன் சிறுகுழந்தை
ரஷ்ய மொழிகளில் பலவாறு புரளி
நெற்றியில் மச்சம் இவன் குந்தியின் மைந்தன்
லியார்ணடோ டி காப்ரியோ / கேட் வின்ஸ்லெட் சன்
இந்த கப்பல் ...கடல்புறா... இளையபல்லவன்
சேகுவேரா பொலிவிய பயணம்...அவர் மகனோ !
நகர்முழுதும் புழுதியாகின புரளிகள்
மன்னர் விளாடிமிர் புடின் யானைவலம்
வளர்க்க ஆணை ... பெயரின்றி குழந்தை
குறும்புகள் அவன் ...அடிமை மற்றவர்கள்
கடலோரம் விளையாட ...கடல்சாமி கண்டான்
அவர் அவன் பெயர் கேட்டார் ...கண்டுபிடிக்கப்படவில்லை
அவன் அவர் பெயர் கேட்டான் ...கொலம்பஸ்
உங்களோடு வரட்டுமா ?...பெயர் கொண்டு வா !
இல்லையே ...இன்றிலிருந்து நீ கடல்மைந்தன்
அவரோடு பயணம் ...


கிமு 1334 - 1566

கடல் பயணம் நெடுந்தொலைவு ...
அனைவரும் துயில ...கடல்மைந்தன் கப்பலோட்டி
புறாக்கள் பறந்தன... தீவை நெருங்கினர்
மேலாடையின்றி ...அழகான செவ்விந்திய பெண்கள்
புலிகளை முறத்தால் அடித்து மேய்த்து சென்றனர்
உற்சாகமிட்டான் கண்டேன் அமெரிக்கா
ஒலிகேட்டு ஒளிபார்த்து ஒலிகொண்டார் கொலம்பஸ்
துயில் முறித்து முறைந்தார்...கண்டேன் இந்தியா
கடல்மைந்தன்... கண்டேன் அமெரிக்கா
சுதாரித்தது ...கொலம்பஸ்
அமெரிக்காவை கண்டேன் ...கண்டுபிடித்தேன் ...மார்தட்ட
வரலாறு...அமெரிக்காவை கண்டது கொலம்பஸ்
சூழ்ச்சியறிந்தான் கடல்மைந்தன்....உணர்ந்தான்
ஒரு மதிப்பெண் வினா... தன் பெயர் இல்லை
வராத பெயர் மரியட்டுமென்று தூக்கிஎறிந்தான்
கடல்மைந்தன் பெயரை ...விலகினான் கொலம்பஸை

21284 நாட்கள் தூங்கிகழிந்தான்

"பயிறேட்ஸ் ஆப் கரீபியன்"கப்பல்வர...பயணம்
தளபதி ஜானி டெப்...அதன் கொள்ளைகளை விவரித்தான்
பெயர் கேட்டு இல்லையென்றதும் தங்கப்பட்டை பரிசு
பரிசின் அடையாளம் ஸ்வஸ்திக் சின்னம்
இந்தியக்கப்பலில் கொள்ளையடித்ததாம்...
ஆஸ்திரியா -வியன்னா எல்லையில் விட்டுச்சென்றான்
கூர்ந்த வேகத்தில் சந்திப்பு ...5அடி 4அங்குலம்
மேகத்தை வரைந்துகொண்டிருந்தான் தனியொருவன்
பெயர் கேட்டால் அடால்ப் ஹிட்லர்
எனக்குபெயர் இல்லையென்றேன் சிரித்தான்
உனக்கு என்ன அடையாளமென்றான்...ஒன்றுமில்லை
கோபப்பட்டான் ...
வரலாறு சிப்பாயை நினைவுகொள்ளா...அரசனாகு
அரசன் ... நல்ல யோசனை
என்னை ஓவியமாக தந்தான்...ஸ்வஸ்திக் தந்தேன்
உன் அடையாளம் ...முதலில் ஜெர்மனி பின்பு உலகமென்றான்
ஹிட்லர் விலக அடக்கிவைத்திருந்த மீசையின் சிரிப்பு
அந்த ஓவியத்தை மீதும் பார்த்தேன்
எனக்கு நானே அழகாகி... ஹிட்லரின் தூரிகை
ஹெயில் ஹிட்லர் தூரத்தில் சென்றவன் ...திரும்பிப்பார்த்து
அர்த்தத்துடன் புன்னகைத்தான் ...



200354 மணி நடை

புத்தர் கோவில் ...
ஒரு பெண் ,இரண்டு எறும்புகள்... பலியிட தாலிபன்ஸ்
தடுத்தேன் ...நீ யார்
ஹிட்லரின் நினைவு ...அரசன்
பயங்கொண்டனர் ...புகைந்த காரணம் உணவு பஞ்சம்
சக்கரையிட்டு எறும்புகளை வளர்க்கமுடியா சூழல்
அந்தபெண் ....அவள் கடல்வழியே பேழையில் வந்தாள்
நான்... அவள் ...எறும்புகள் நடக்க ஆரம்பித்தோம்
கரும்பு காடு... நன்றி சொல்லி பிரிந்தன எறும்புகள்
அவள் பெயர் கேட்டேன் சின்றல்லா
என் பெயர் கேட்டாள் சின்றல்லாமேன்
1500 நொடிகளில் கந்தர்வமணம் ...
எதிரே புத்தர் ...ஆசையை துற
உங்களுக்கு யசோதரா ...நீங்கள் சிந்திக்கவில்லை
எனக்கு சின்றல்லா ...நான் சிந்திக்கிறேன்
ஆசை வைத்து என்ன செய்ய போகிறாய்
ஆசையை துறந்து என்ன சாதித்தீர்
ஸ்ரீலங்கா பக்கம் போய் பாருங்கள் உங்கள் புதல்வன்களை
நான் கடவுள் ஆகா விரும்பவில்லை ...வருகிறோம்

கி பி 1934

பிரான்சை அடைந்தோம்
வழியில் நாஜிபடை ...சிறைபிடிப்பு
மரண தண்டனை ...காரணம் யூதர்கள்
சிங்களனை விட ஜெர்மானியன் மோசம்
எங்கள்மேல் விசவாயு பாய்ச்சும் முன் ...ஹெயில் ஹிட்லர்
நானும் ஹெயில் ஹிட்லர் ...குழப்பமானார்கள்
ஹிட்லருக்கு புறாதூது ... உடனே வந்தான்
கட்டிப்பிடித்தான் ...நான் விரும்பவில்லை
ஸ்வஸ்திக் கட்சி சின்னம்
இந்தியன் ஏர்லைன்ஸ் ...அவனுடைய செலவு
எகிப்து வழி பயணம் ...வந்தது செய்தி
நேச நாடுகள் வெற்றி ... ஹிட்லர் தற்கொலை
எகிப்துபடை வளைக்க... அரசியின் முன்
யார் நீங்கள்? இவள் சின்றல்லா.... நான் சின்றல்லாமேன்
நீங்கள் யார்? நான் கிளியோபட்ரா
தண்டனை ? மரணம்
வேறு வழி ...ஒரு வழி ...என்ன ?
என்னை திருமணம் செய்ய வேண்டும்
நான் சின்றல்லாமேன்
மரண தண்டனை நிறைவேறட்டும் ...


ஆ ...ஆ ...என்ன இது ...அவள் சொன்னாள்...ம் "..சூடு

ஆ ...ஆ ...என்ன அது ...நான் சொன்னேன் ...ம் "...கனவு

சூடு ...? ம் "..சுக்கு காப்பி

கனவு ...? ம் "...என் சினிமா...

அவளுக்கு தெரியாது ...பிறகு சொல்லிக்கொள்கிறேன்

உங்களுக்கு புரிந்ததா ....

என் சினிமாவும் ...அவள் சுக்கு காப்பியும்... சுவை

நான் இளவரசியை தேடி போக வேண்டும் ?

நான் எங்கிருக்கிறேன் ?
நீ அம்புலிமாமா கதையில் ...
தினத்தந்தி சிந்துபாத்தில் இல்லையா ?...
உன்னை மாற்றி அச்சடித்துவிட்டார்கள் ...
நான் இளவரசியை தேடி போக வேண்டும் ?
நான் அனுமதித்தால் மட்டுமே ...
நீங்கள் யார் ?
முருங்கைமர வேதாளம் ...
உன்னை ஒரு மன்னன் தூக்கித்திரிந்தானே ?
அவனுக்கு வயதாகிவிட்டது + தோள்வலி ...
எனது பாக்தாத் இளவரசி ?
என் கேள்விக்கு பதிலிட்டால் ...
என் பயணம் அதுவன்று ?
உன்தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் ...
ஆ? ...
கேள்வி ...
தாமரை யார்வசம் ?

அதிகாலை அரை ஊசலில்
பூமலர் வெடிக்க வெண்சிவந்த
மொட்டு மலர்ந்து ...
உன் உயிர்மடி திறந்து பூப்பெய்தி
மஞ்சள் செவ்விய கரங்கொண்டு
உயிர்ப்பிக்க தினம் வரும் இளங்கதிரா?

சிருங்கார இதழையும் கருவிழி அழகையும்
வேண்டா இசையின் உயிர்ப்பையும்
உன்மேல் கொட்டி
உன்கொடியிடையை அழுந்தப்பற்றி
இதழ்கள் சுவைக்கும் அழகையும்
அவ்வின்பத்தை மெல்ல மெல்ல
இசைந்து ஏற்றுக்கொள்ள செய்யும்
உணர்வையும் தரும் கருவிழி வண்டா?

இதழ்களைவிட மென்மையான
விரல்களைக்கொண்டு
பேதையான உன்னை போதையேற்றி
அங்கும் இங்கும் அசையும் வண்ணம்
நடனப்பயிற்சி அளித்து
கந்தர்வனைப்போல் உருவமில்லாமல்
தேகம் தழுவி இன்முகப்படுத்தும் தென்றலா ?

தாமரை யார்வசம் ?
காப்பாற்றுங்கள் ....
என்தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் ...
நான் இளவரசியை தேடி போக வேண்டும் ?

நீ விரும்புகின்ற பொய்...

சரி !

சொல்லட்டுமா ?


என் கவிதைகளும்
உன்னை விரும்புகின்றன ...

என் அம்மாவுக்கும்
உன்னை பிடித்திருக்கிறது ...

என் நாய்க்குட்டிக்கும்
உன் வாசம் அறிமுகமாகிவிட்டது ...

என் சட்டைகளை போடுவதில்லை
தங்கைக்கும் பிடித்துவிட்டது ...

புகையிலை அணைப்பானை
வெளியே வீசிவிட்டார்
என் அப்பாவுக்கும் பிடிக்கிறது ...

பொறுமையும்
கூடவே
நெற்றிப்பொட்டும்
என் கண்ணாடிக்கும் பிடிக்கிறது ...

உன்னைத்தேடி
வெகுதூரம் வரவேண்டாமாம்
என் கனவுக்கும் பிடிக்கிறது ...

என் தனிமை உணர்ந்ததால்
இயல்பாகிறது
என் கட்டிலுக்கும் பிடிக்கிறது...

கண் மூடி
மண் மூடி
போகும்வரை
என் பசலை நோய்
இதற்குமேல் சொல்லவேண்டாமா ?
போதுமா ?
ஏன்?

சொல்வதெல்லாம் உண்மையா ?
அப்படியென்றால் நீ சொல் ?
மாட்டாயா ?
வெட்கம் தின்கிறதா ?
என்னை தின்னவில்லையே ?
நீ விரும்பிய பொய்யா ?

போடாவா ?

ஏன் அப்படி பார்க்கிறாய் ?
ஏன் நெருங்குகிறாய் ?
முத்தமிட போகிறாயா ?
அப்படியென்றால் பேச மு ....

நிழல் தேடி நாங்கள் எறும்புகள்-Rain Rain Come again

...

ஓசோன் குருட்டில் அக்கினி குஞ்சுகளாய் காஸ்மிக் கதிர்கள்

வறண்ட போர்வைமேல் நிழல் தேடி நாங்கள் எறும்புகள்

சுறுசுறுவென வியர்வையுடன் அமைதியாக படுத்துக்கிடந்தது மண்

சுற்றித்திரிகையில் எங்கும் கரகரவென வெய்யிலை விரும்பும் கட்டிடம்

ஆங்காங்கே செயற்கை உரமிட்ட நிழல் மரங்கள் உடல் எரிக்க

திரும்பிய பக்கமெல்லாம் தீ எரிய

பல குரல்கள் ஒரு அறையில் கேட்க நுழைந்தோம் அனுமதியின்றி

சூரியனை அடக்கிய குளிர்பெட்டியுடன் மழழைகள் பாடம் படிக்க

இவர்களை கடிக்கலாகது என எண்ணுகையில் தோன்றியது

ஈரத்திற்கு ஒதுங்கியது பள்ளியா?

அவர்கள் படிப்பது நன்றாக கேட்டது

rain rain go away
rain rain go away

மழழைகள் மழை பாட்டு பாட...

அறைந்த செவிகளுடன் சன்னலோரம் திரும்பினோம்

தூரத்தில் கானல் நீருற்றி அருவெறுப்பாக காய்ந்த மரம்

வெக்கையுடன் ஒதுங்கிய எங்களுக்கு வெட்கமாக இருந்தது

அனுதினம் மழைப்பெய்யும் ஐரோப்பா
இதற்க்கு பாட்டிசைத்த புலவன்
அவர்கள் நாடு ....அங்கு பாடு ....அது உண்மை

நாங்கள் எறும்புகள்
இவர்களின் பொய்கள் எங்களை இன்னும் கொழுத்தின

மழைக்கான எதிரிகளின் ஆவேசத்தில்

Rain Rain Come Again
Rain Rain Come Again

வானை நோக்கி உரக்க குரலிட்டு நடந்தோம் நேர்மையாக

நிழல் தேடி நாங்கள் எறும்புகள்
Rain Rain Come Again

மழழை-ரசிகன்-உதவி இயக்குனர்-பைத்தியக்காரன்அழுகிறேன்

நான் வளராமல் சிறியவனாகி
பஞ்சாயத்து தொலைக்காட்சிமுன்
இடம்பிடித்து மணல் குவித்து
ஓட்டை டவுசருடன்
சாக்கிட்டு ஏறியிருக்கிறேன்

வயலும் வாழ்வு முடிந்து
வெள்ளிக்கு ஒளியும் ஒலியும்
சனியென்றால் இந்திப்படம்
ஞாயிறென்றால் தமிழ்ப்படம்
இன்னும் சிறிது நொடிகளில்
எண்கள் குறைய ஆரம்பிக்க

ரஜினிதான் நல்ல சண்ட
போடுவான் ரஜினி படம்
ஒன்னும் கிடையாது கமலுதான்
போடா மூக்கொழுக்கி ராமராஜன்தான்
அய்ய அவன் மாடுதான் மேய்ப்பான்
சாமி சத்தியமா விஜயகாந்துதான்
தரைமண் தலைமேல் ஊர்வலமாக

ஏய் ராசுக்கோலுகளா !
படம் சுருக்கா வரப்போது
சும்மா கெடக்கமாட்டிக
சிறுசுகள் அடங்க பெருசுகள் கத்தின
பாட்டிகளை கருத்தில் கொண்டு

அடங்காமல் களம்கொண்டன
பதினெட்டு ரீலு நிறைய்ய பெருசு
சண்டைப்பயிற்சி இருக்கா?
சண்டைப்பயிற்சி !
சண்டைப்பயிற்சி !
சண்டைப்பயிற்சி !
ஏமாத்திபுட்டாண்டா
சண்டைப்பயிற்சியே கானோம்
நான்போறேன் ஒழிஞ்சிவிளாட்டு
யார் வரீங்க ...

இதிலெல்லாம் காதின்றி
ஜெமினிகணேசன்
சாவீத்ரி
நம்பியார்
மேஜர் சுந்தர்ராஜன்
பாலய்யா
நாகேஷ்
மனோரம்மா
முனுமுனுத்துக் கொண்டிருந்தன
அன்று நிக்கோடின் படாத என் உதடுகள்
..............................
................................................நான் மழழை

பெற்றோரிருந்தும்
அனாதையில்லத்தில்
இரும்புக்கோட்டையில் மாயாவி
அம்புலிமாமா
சிறுவர்மலர்
டயானா இறப்பிற்கு அழுது
இங்கிலாந்து இளவரசிக்கு அழுகின்றவன்
அடிக்கப்படுபவனல்ல
வாத்தியார்கள் வித்தயாசம் கண்டு

தமிழிலும் சமூக அறிவியலிலும்
அதிக மதிப்பெண் பெற்று
ஆறு தன்வரலாறு கூறுதல்
சுயசிந்தனை பெற்று
அநாதையில்ல விடுதி மாணவர்க்கு
இலவச தனிவகுப்பு எடுத்த
பயிற்சி டீச்சரிடம் பிஞ்சில் பழுத்து

இரவானால் வெளிவரப்பயப்படும்
விடுதியின் பேய்களை நண்பனாக்க
இருட்டில் பலபெயர் சொல்லி அழைத்து
ராஜேஷ்குமார்
சுபா
தேவிபாலா
பழைய புத்தகக்கடையில்
கால்விலையில் வாங்க
இப்போது படிக்காத தங்கமலரை
ஓரத்தில் பார்த்து மனம்கசிய

சிவகாமியின் சபதம்
கடல்புறா
கி.ரா
மதிலுகள்
சு.ரா
சுஜாதா
புண்கண்டாலும் புத்தகத்தில் சீல்துடைத்து
புத்தக வாசனையிலேயே
காட்டுமிராண்டித்தனம் களிப்படைந்து

எண்டமூரி வீரேந்த்ரனாத்
தீராநதி உயிர்மையென
கடலும் கிழவனும் தொட்டு
கண்களெல்லாம் காமமாக
திரையரங்குகள் கூடலாக
யூதர்களுக்காக யாருமறியாமல்
60 வருடம் கழித்து அழுது
அனைவரும் முறைக்க
அவன் யாரென்று யோசித்த
........................................
...............................................................நான் ரசிகன்

ஓடிவந்தேன் சென்னைக்கு
நடைபாதைகளில்
பேருந்து நிறுத்தங்களில்
வெகு சீக்கிரமும் வெகுநேரமும்
உறங்கமுடியாமல் உறங்கியதில்
இருந்ததையும் தொலைத்து
என்னையும் தொலைக்க இருக்க
அரவணைத்த அரவாணிகள்
குரோமோசோம் கலப்பிலும்
மனிதம் காட்ட பிழைத்துவந்து

முதல் முயற்சியே
வயசுகம்மி மீசை முளைக்கல
அதுக்குள்ளவா உதவி இயக்குனர்
கல்லெடுத்து சேரன் துரத்தி
ஆட்டோகிராப் போஸ்டரில் சிறுநீர்கழித்து
மனிதம் மறைத்த மனிதர் பார்த்து
எனக்குநானே பேசிக்கொண்டு
நாட்கள் நகர்த்தி சோர்வடைந்து
உலகப்படங்களில் உயிர்ப்பெற்று

புத்திசாலியற்ற அடிமையாக
சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வெளியாக
சபதமிட்டுவந்த கோயம்புத்தூர்
வந்த நாள் முதல் செல்லாமல்
நான் வேலை செய்த முதல் படத்தில்
முதல் காட்சியில் கட்டியணைத்தது
........................................
...............................................நான் உதவி இயக்குனர்

என்னை எனக்கு எடுத்துரைக்க
சண்டையிட்டு திமிர்பிடித்தவன்
விளம்பரங்கள் மூன்றியக்கி
படமியக்க முயற்சிக்க
வேகாது உன்சட்டி
கீழ்த்தரங்கள்
முலாம் பூசென்கிறார்கள்
அறிவில்லாத முனையில்லை என்றாலும்
அதையேதான் விரும்பி கேட்கிறார்கள்
விரும்பிய சினிமாவிற்கு வாழாமல்
விரும்பாத மனிதர்களால் கழுவேற்றி
உயிரோடு வாழும்போது
வெட்கப்படு
உன்தமிழினம் சாகிறதென்று
தினமெல்லாம் மனம் நோக
புலியாகும் வாய்ப்பில்லை காடழிந்துவிட்டது
ஆதரிப்பார் யாருமன்றி என்செய்வேன்
........................................
...................................................நான் பைத்தியக்காரன்

அழுகிறேன்


வெண்ணிற இரவுகள்

சொல் ...?
முதலில் ஒரு கதை சொல்கிறேன்
நீ சொல்ல வந்தது ...?
பிறகு நான் சொல்லவந்ததை சொல்கிறேன்
அப்படியா ...?
ம் ...சொல்லட்டுமா ?
ம்...


அவனுக்கு டீ பிடிக்கும்
அவளுக்கு காப்பி பிடிக்கும்
இருவரும் ...காதலித்தார்கள்

ம் ...

பழைய ரஷ்யா
மெல்லிய இரவு நேரம்
சுட்டுவிடும் பனி பெய்தது
அரேபிய குதிரை நகர் நுழைவு
அதில் அழகான அவன்
எதிர்பட்ட செந்நிற அழகிகள்
சிரிப்பை சினுங்கலாக்கினர்
காதல்கண்ட தனிமை பெண்கள்
ஏக்கத்தை புன்னகையாக்கினர்
உச்சரிப்பிலாத உதடுகள் உரச
ரசனைகள் ரசங்கள் சிந்திக்கொண்டன
மாடங்களை திறக்க பறந்த புறாக்கள்
அவசரமாக முத்தமிட்டுக்கொண்டன
பிறந்தபயன் காதல்வேலை வந்ததென

அவன் அழகான அவன்
நீளமான கூந்தலையும் மார்பையும்
மறைத்துசென்ற தேவதைகளை
குறும்புடன் பின்பற்றி அடைந்தான்
செவ்விந்தியர்களின் விடுதியை
ராஜராஜ சோழன் சுற்றுலாவின்போது
இலவசமாக தந்த பல்லில்லாத புலிகளை
விடுதிவாசலில் காவலுக்கு கட்டியிருந்தனர்
புலிகள் அவன் குதிரையை ரசிக்க
அவைகளை கடந்து விடுதிக்குள் நுழைந்தான்
அவன் அழகான அவன்

பெரிய விடுதி குறைவான மனிதர்கள்
வயலின் இசை பரவிக்கிடந்தது
அவன் அந்த மேசையில் அமர்ந்தான்
அவன் பின்னே யாரோ அமர்ந்திருந்தனர்
ஒரு அழகிய பெண்ணாகவும் இருக்கலாம்
குருட்டுக்கிழவன் என்ன வேண்டுமென்றான்
அவன் டீ பிடிக்கும் என்றான்
பின்னால் யாரோ காபி என்றனர்
அவன் மேசையில் தாளமிட்டான்
குருட்டுக்கிழவன் டீ கொண்டுவந்தான்
பனியில் நனைந்த உதடுகளை சுவைப்படுத்த
ஆவலோடு பார்த்தான் ... டீ
ம் ஹும் ...டீ அங்கு இல்லை ...கோபம்
நான் டீ பிடிக்கும் என்றேன் ...என்றான்
பின்புறத்தில் தேன் தடவிய குழலின் குரல்
எனக்கு டீ வந்துள்ளது ...
நான் காபி பிடிக்கும் என்றேன் ...என்றது
குருட்டுக்கிழவன் சலனமின்றி
மாற்றிக்கொள்ளுங்கள் என்றான்
வயலின் இசை இப்போது நின்றிருந்தது

அவன் அழகான அவன்
புன்னையோடு பின்புறம் திரும்பினான்
அங்கே ...
அவள் அழகான அவள்
ரஷ்ய இலக்கணமாய் கையில் புத்தகத்துடன்
அவன் அவளுடைய காபியையும்
அவள் அவனுடைய டீயையும்
மாற்றிக்கொள்ள எத்தனித்தனர்
காப்பியும் டீயும் ஒன்றையொன்று
கடந்து செல்ல நெருங்கின
அப்போது இருவரின் கண்களும்
கவர்ச்சியிட்டுக்கொள்ள...
உந்திதலில் இருவரின் விரல்களும்
மென்மையாக பட்டுக்கொண்டன
இதில் வெட்கப்பட்டு விரல்கள் தடுமாற
காப்பியில் உள்ள காப்பி சிந்தி டீயிலும்
டீயில் உள்ள டீ சிந்தி காப்பியிலும்
நழுவி விழ ...


நின்றிருந்த வயலின் இசை
மெல்ல இசைய ஆரம்பிக்க
குருட்டுக்கிழவன் சலனமின்றி
கடந்து சென்றான்
அவள் வைத்திருந்த புத்தகம்
இனி நமக்கு வேலையில்லை என
தானாக மூடிக்கொண்டது ...அதில்
பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்
வெண்ணிற இரவுகள் ...

என்ன அவ்வளவுதானா...?
இனி நீயே புரிந்து கொள்ளவேண்டியதுதான்
அப்படியா ...?
ம் ...நான்தான் சொன்னேனே !

அவனுக்கு டீ பிடிக்கும்
அவளுக்கு காப்பி பிடிக்கும்
இருவரும் ...காதலித்தார்கள்

என்ன அமைதி ?
ஒன்றுமில்லை ...நீ சொல்லவந்ததை சொல் ?

இனி நான் என்ன சொல்ல ...
அதோ அங்கொரு விடுதி தெரிகிறது
எனக்கு டீ பிடிக்கும் ...
உனக்கு ?........

புரிதல்

உன்னிடம் உன்னைப்பற்றி பேசவேண்டும்
ஆனால் அதில் நானும் உண்டு
மழை பெய்ய போகிறது
அப்படியே நடப்போமா ...

மழைவரும் "முன்பே" ...குடை எடுத்து வருகிறாய்...
அனைத்திற்கும் இப்படி " முன்பே " என்பது உண்டு
இருவர் இணையும் வாழ்வில் உண்டா ?
நான் திருமணத்தின் முன்பே புரிதல் எடுத்து வருகிறேன்

சிரிக்காதே ...

இது கவிதை இல்லை என்கிறாயா ?

இயல்பாய் பேசுகிறேன்

தேனிர் அருந்துகிறாயா ?
அங்கே பார்!...அந்தப்பெண் ...நீளமான கூந்தல்
கவர்ச்சியாய் இருக்கிறாள் அல்லவா ?
நீ அவளை ரசிக்கவில்லையா ?
ரவுத்திரம் கொள்கிறாய்
நீ ரசிக்கும் ஆடவன் பற்றியும் சொல்லு ...தவறில்லை
தேனிர் வந்துவிட்டது ...நான் புகைக்கலமா ?
உனக்கு பிடிக்கவில்லையா ?
தேனிரா...நான் புகைப்பதா ?
புன்னகைக்கிறாய்
நான் பேசுவது உனக்கு பிடித்திருக்கிறதா ?
ம் ...புகைப்பதற்கு சம்மதமா ...நன்றி
அப்படியென்றால்
உன்னை முத்தமிடுமுன் புகைத்துவிட்டு வரலாமா ?
ஏய் ! கோபம் கொள்ளாதே ரொம்ப அழகாகிறாய்
தேனிர் சிந்துகிறது ...ஆ !
ஒன்றுமில்லை சிறிதாக சுட்டுவிட்டது
ஏய்! இது என்ன உன் கையில் தழும்பு
சிறு வயதில் நாய் கடித்ததா ?
நாய்க்கு ஒன்றும் ஆகவில்லையே
துரத்தாதே ...
இந்த அரசாங்கம் பாதைகளை சரியாக போடுவதில்லை
இதில் ஓட முடியாது
சரி சரி நேரம் பார்க்கிறாய்
விரைவில் செல்ல வேண்டுமா ?
ஒ !..நான் சொல்ல வந்ததை விரைவில் சொல்ல வேண்டுமா ?
சொல்கிறேன் ஏன் பதட்டமாகிறாய் ?
மற்றவர்கள் எதாவது சொல்லுவார்களா ?
என்ன சொல்லுவார்கள் ?
நீ பெண் என்பது
பிறகு நீ திருமணவயது பெண் என்பது
நீ ஆமோதிக்கிறாயா ?
மற்றவர்களுக்காகவா ?
இப்போது நான் சொல்ல வந்ததைசொல்லட்டுமா ?
என் மருத்துவ சான்றிதல் பிடி
அப்படி குழப்பமாய் பார்க்காதே
திருமணம் செய்துகொள்ளலாமா ?
கண்கள் சிவந்தால் கோபம்
கன்னம் சிவந்தால் வெட்கம்
உனக்கு இரண்டும் சிவக்கிறதே
என்ன பார்க்கிறாய்
நான் இயல்பானவன்
உன்னை புரிந்து கொண்டேன்
உனக்கும் என்மேல் புரிதல் இருக்கிறதா ?
கண் கலங்குகிறாய் ?
ஆனந்த கண்ணீரா ?
அட உடனே சிரிக்கிறாய்
நானும் அழுகிறேனா ?
துடைக்காதே...அது மகிழ்ச்சி
சரி சரி இன்னொருமுறை புகைக்கட்டுமா ?
வேண்டாமா ....
உனக்கு பிடிக்கவில்லையென்றால் சரி
ஒரு சிலர் கவனிக்கிறார்கள்
மழை பெய்கிறது
நனைந்துகொண்டே
அப்படியே கொஞ்ச தூரம் நடப்போமா
உன்னிடம் உன்னைப்பற்றி பேசவேண்டும்
ஆனால் அதில் நானும் உண்டு...