Sunday, November 15, 2009

உன்னை நோக்கி முத்தங்கள் வீசப்படும்

பிடிக்கவில்லையா ...என்னை மட்டுமா ...அனைவரையுமா...
என் கண்களை அழ வைக்கிறாய் ...
ஏன் மௌனம் ...நீயும் அழுகிறாயா ...
என் முத்தங்கள் வீசுகிறேன் ..கண்ணீரை அடை...
முடியாதா...இரு இதை படிப்பவர்களையும் அழைக்கிறேன் ...
இப்போது சொல் ...
நீ சொல்வதை நான் அவர்களுக்கு சொல்கிறேன் ...அனைவரும் கேட்கட்டும் ....

படிப்பவர்கள் கேட்கிறீர்களா ?....

உன்னில் பாட்டியும் ..முயலும் நாங்கள் தான் வைத்தோம் ...
ஒ ' நீதான் அவர்களை பார்த்துக்கொள்கிறாயா....
மலை மேல ஏறி வா ....மல்லிகைப்பூ கொண்டு வா ... ம் ' அது குழந்தைகளுக்காக ...
ஒ ' நீ அதற்காக தினமும் முயற்சி செய்தாயா ...
அமுதே ...கண்ணே ...அது காதலர்க்காக ....குழந்தைக்கு உணவூட்ட ...
எங்களை இருள் மூழ்காமல் இருக்க நீ தேய்ந்தாயா ....

ஏய் ! ...அழுவாதே ...
இதைப்படிப்பவர்கள் கேட்கிறார்கள் ...
அவர்களிடம் நீ கேட்பதுபோல ஒரு வினா கேக்கட்டுமா ?
...ம் ' சரி ..
இதை படிப்பவர்கள் கடைசியாக எப்போது என்னை பார்த்தீர்கள் ?

நீ சொல்வது உண்மைதான் ...ஒரு சிலர்தான் பதில் சொல்கிறார்கள் ...
கடவுள் என்று சொல்லப்படுபவர் கூட தவம் , பூசை ,
திருவிழா பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் ...
ஆனால்
நீ ! நேரில் வருகிறாய் ...எங்களுக்காக தேய்கிறாய் ....
உன்னை பலவாறு பயன்படுத்துகிறோம் ...
காலச்சூழ்நிலை மாற மாற ...நீ புத்தகத்தில் மட்டும் ...மனதில் இல்லை ....
உன்னை பார்ப்பவர்கள் மறைந்து போகவில்லை ...
அதே வேளை மக்கட்தொகையும் ...ம் ' ஹும்
உன் கோபம் நியாயமானது ....ஆதரவளிக்கிறேன் ....
இதே படிப்பவர்களும் அளிப்பார்கள் ...
நீ நண்பன் ...காதலி ...தாய் ....தெய்வம் ...குழந்தை ...கோள்....
உன்னை நோக்கி முத்தங்கள் வீசப்படும் ....கோபம் கொள்ளாதே ...

No comments:

Post a Comment