Sunday, November 15, 2009

அவளைப்பற்றி சொல்கிறேன் ...

எங்களின் முதல் சந்திப்பு .....

எனக்கு கவிதை எழுத ...
சுடுகாடு பிடிக்கும் ...
அன்று ஒரு குழந்தையின் கல்லறையின் முன் அமர்ந்து ...
காமத்தில் முத்தம் வரியிட முயன்றேன் ....
வார்த்தைகள் தடை ...
எறும்புகள் வேறு கடிக்க ....அடுத்த கல்லறையின் முன் ...
அமர்ந்து எழுத என்னால் காமத்தை சுமக்க முடிந்தது ....
அந்த கல்லறை மனிதரின் வயது 1900 - 1989 என்று ...
பொறித்து அழிந்திருந்தது ...
அந்த மனிதர் சிறந்த தலைவியை அடைந்திருப்பார் என்று...மகிழ்ந்து சிரிக்க ... அடுத்து கல்லறைக்கு ஒரு கூட்டம் நுழைந்தது ...
அவர்களின் சோகம் என்சிரிப்பை மறைத்துக்கொண்டேன் ...
அந்த கூட்டத்தில் ...
ஒரு பெண்.... sorry இளம் பெண் ....மறுபடியும் sorry அழகான இளம் பெண் ...
அழுது வீங்கி அழுதுகொண்டிருந்தாள் ...
அனைவரும் அவளும் இறந்தவரை பார்க்க ...
நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன் ...
அனைவரும் கிளம்ப அவள் மட்டும் அங்கேயே இருந்தாள்...
அழுதுகொண்டிருந்தாள் ...அவளிடம் பேச முயற்சித்தேன் ...
முதலில் நான் மனிதன் தானா?...என்பதில் உறுதியாக இருந்தாள்...
5 நிமிடங்களுக்கு பிறகு ...
என் கவிதை அனுபவங்கள் அவளை இயல்பாக்கின ....
அவள் உதடுகள் ஈரமாக ...இருந்ததினால் மெல்லிய வடிவில் பேசினாள்...
இருவருமே பேசினோம் ....என்கவிதைகளை வாசிக்க கேட்டாள்....


எங்களின் காதல் ....

என்னை வாசிக்க ஆரம்பித்தாள்...
அவளை ரசிக்க ஆரம்பித்தேன் ...
இந்த கவிதையில் தவிர ...
இதை படிக்கும் உங்களை தவிர ...
அங்குள்ள கல்லறைகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ...
ஒரு கவிஞ்சன் சுடுகாட்டில் தன் தலைவியை சந்தித்தான் ...
அவளின் முதல் முத்தத்தை அங்குதான் ஏந்தினேன் ...
முதலில் அவள் சம்மதிக்கவில்லை ...
பேய்களின் முன் முத்தமா ?...
நாம் காதலர்கள் என்று தெரிந்தால் பேய்கள் நம் அருகில் வரா ...
நான் கொடுக்கட்டுமா ...நீ இடுகிறாயா ...
இப்போது பேய்களை விடுத்து ...
வெட்கத்தை எடுத்துக்கொண்டாள்...அதன் பின்னர் ...
அவளிடம் முத்தங்கள் ...கேட்பதே இல்லை ...ஏனென்றால்
அவளிடும் முத்தங்களின் ஈரம் காயும் முன்
அடுத்த முத்தங்கள் பிறந்துவிடுவதால் ....
வெட்கத்தை நான் எடுத்துக்கொண்டேன் ...


எங்களின் தாய்மை ...

முதல் முறையாக என்னை விடுத்து இன்னொரு உயிர்க்கு ...
அதே காதலுடன் முத்தமிட்டாள்...
அதே ஈரத்துடன் ...என்னையும் முத்தமிட்டாள் ...
என் தாய் இறக்கவில்லை என்றேன் ...
போடா ! என்றால் ....
நான் அழுதேன் ....தலை கோதினாள்...
உன் பிரசவ வலி தெரிந்திருந்தால் நான் இதற்க்கு மறுத்திருப்பேன் என்றேன் ...
அவள் என் தாயை உணர்ந்தேன் என்றாள்....
சிரித்தோம் ...
எங்கள் குழந்தை அழுதது ....
எங்கள் மூவர் உதடுகளிலும் ஈரம் இருந்தது ....


எங்களின் முதுமை ...

நாங்கள் இருவருமே குழந்தையானோம் ...
ஷேக்ஸ்பியரின் 7 வது stage இல்இருக்கிறோம் என்றேன் ....
அவள் அதை நம்பியதே இல்லை ....
என்னை முதன் முதலில் சந்தித்த
அந்த சுடுகாட்டில் அமர்ந்து என்னுடைய கவிதைகளை
இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதாக கூறுவாள் ...அதன் பின்
நான் கவிதைகள் எழுதுவதே இல்லை ...
அவளுடன் நானும் வாசிக்க தொடங்கினேன் ...
அவளை ....ஒரு பெண் sorry இளம் பெண் மறுபடியும் sorry அழகான இளம் பெண் ...
அழுது வீங்கி அழுதுகொண்டிருந்தாள் ...
அனைவரும் அவளும் இறந்தவரை பார்க்க ...
நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன் ...
அன்று ஒரு நாள் என் உடல்நலம் சரியில்லை ....
முத்தங்களையே மருந்தாக இட்டுகொண்டிருந்தாள்
மறுநாள் ....எனக்கும் தெரியவில்லை ...அவளும் நம்பவில்லை
நான் இறந்து விட்டதாக மற்றவர்கள் கூறுவது ...


நாங்கள் மட்டும் ...முழுவதும் தெரிந்ததினால் நீங்கள் மட்டும் ....



இதுவரை அவளைப்பற்றி அனைத்தையும் கூறிவிட்டேன் ....
அவள் வரும் நேரமாகிவிட்டது ...
அதே சுடுகாடு ...
என் கல்லறையில் அமர்ந்து இருக்கிறேன் ...
அவள் தூரத்தில் பூக்களோடு வருகிறாள் ...
அவள் கையில் என் கவிதைகள் ...
என் கல்லறையில் அமர்ந்து என் கவிதைகளை வாசிக்க தொடங்கினாள்...
அவளுடன் நானும் வாசிக்கதொடங்கினேன் ...
அவளை ....ஒரு பெண் sorry இளம் பெண் மறுபடியும் sorry அழகான இளம் பெண் ..

3 comments:

  1. verithanamaana sinthanai, aalamana karuthukkal..

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  3. என்ன சொல்வதென்றே தெரியவில்லை....அசோக்கின் கருத்தையே ஆமோதிக்கிறேன் "வெறித்தனமான சிந்தனை " அருமை ...

    ReplyDelete